/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளி மாணவியருக்கு தீபாவளி புத்தாடைகள்
/
அரசு பள்ளி மாணவியருக்கு தீபாவளி புத்தாடைகள்
ADDED : அக் 18, 2025 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், பெற்றோரை இழந்த மாணவியருக்கு அரிமா சங்கம் மற்றும் ஈகை அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 32 மாணவியருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. அரிமா சங்கம் மற்றும் ஈகை அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி ஆசிரியைகள், மாணவியர் பங்கேற்றனர்.