ADDED : அக் 19, 2024 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நடந்தது.
தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு அவைத்தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பத்மநாபன் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதிக்கு வாழ்த்து தெரிவிப்பது; அவரை துணை முதல்வராக தேர்வு செய்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது; வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் குறித்த நடை ெபறும் முகாம்களில் பகுதி மற்றும் பூத் வாரியாக பூத் ஏஜன்ட்கள் பணியாற்றுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.