ADDED : ஜன 28, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
இடுவம்பாளையம், காமாட்சியம்மன் கோவில் திடலில் நடந்த கூட்டத்துக்கு, கவுன்சிலர் சுபத்ரா தேவி தலைமை வகித்தார். மாணவர் அணி அமைப்பாளர் கோபிநாத் முன்னிலை வகித்தார். எம்.பி., கிரிராஜன், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் திராவிட மணி சிறப்புரை ஆற்றினர்.
இதில், மாவட்ட செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.