sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 உயிர் சேதம் ஏற்படுத்தும் நாய்: காலரா தடுப்பூசி செலுத்துவது அவசியம்

/

 உயிர் சேதம் ஏற்படுத்தும் நாய்: காலரா தடுப்பூசி செலுத்துவது அவசியம்

 உயிர் சேதம் ஏற்படுத்தும் நாய்: காலரா தடுப்பூசி செலுத்துவது அவசியம்

 உயிர் சேதம் ஏற்படுத்தும் நாய்: காலரா தடுப்பூசி செலுத்துவது அவசியம்


ADDED : நவ 25, 2025 05:37 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: 'செல்லப்பிராணிகள், நாய் காலரா எனப்படும், 'கேனைன் பார்வோ வைரஸ்', தாக்குதலால், உயிரிழப்பதை தடுக்க குறித்த நேரத்தில் தடுப்பூசி போட வேண்டும்,' என கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் பரவலாக பருவமழை காலத்தில், செல்லப்பிராணிகளை பல்வேறு நோய்கள் தாக்குகின்றன.

இதில், நாய்க்குட்டிகளுக்கு எளிதில் பரவி, உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நாய் காலரா எனப்படும் 'கேனைன் பார்வோ வைரஸ்', குறித்து அவற்றை வளர்ப்போர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கல்லுாரியின் மருத்துவவியல் துறை உதவி பேராசிரியர் இன்பராஜ் கூறியதாவது: கடந்த 1978ல், முதன்முதலில், 'கேனைன் பார்வோ வைரஸ்' கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் நாய்க்குட்டிகளின் இரைப்பை மற்றும் குடல் பகுதியை பாதிக்கிறது.

பாலுாட்டு நேரத்தில் இருந்து, 6 மாதம் வரை நாய்க்குட்டிகளுக்கு இவ்வகை வைரஸ் பரவி, உயிர் சேதத்தை ஏற்படுத்துகிறது. நாய்க்குட்டிக்கு வாந்தி, ரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் நீர் வற்றி விடுதல், உடல் மெலிந்து சோர்ந்து காணப்படுவது முக்கிய அறிகுறிகளாகும்.

இந்த வைரஸ் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. பெரும்பாலான இறப்புகள் நோய் அறிகுறிகள் தென்பட்டு, 2-3 நாட்களுக்குள் நிகழ்கிறது.

இந்த நோயில் இருந்து நாய்க்குட்டிகளை பாதுகாக்க, 6-16 வாரத்துக்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும். 6 முதல் 8 வாரங்கள், 10-12 வாரங்கள் மற்றும் 14 முதல் 16 வாரங்கள் வரை மூன்று முறை செலுத்தப்படுகிறது.

பின்னர் 'பூஸ்டர் டோஸ்' ஒரு ஆண்டுக்கு பிறகு செலுத்த வேண்டும். வேகமாக பரவும் தன்மை உடையதால், நோய் அறிகுறிகள் தென்பட்ட உடன் நாய்க்குட்டிகளை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

நாய்க்குட்டி பராமரிக்கப் படும் இடத்தை கிருமிநாசினி யால் துாய்மைப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us