/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி வீதியில் துள்ளும் நாய்கள்
/
பள்ளி வீதியில் துள்ளும் நாய்கள்
ADDED : மார் 31, 2025 05:49 AM

மூடப்படாத குழி
ராயபுரம், மிலிட்டரி காலனி நான்காவது வீதியில் குழாய் பதிக்க குழி தோண்டி, பணி முடிந்த பின், குழியை சரிவர மூடவில்லை.
- வின்சென்ட்ராஜ், மிலிட்டரி காலனி. (படம் உண்டு)
பெயர்ப்பலகை சேதம்
திருப்பூர், மங்கலம் ரோடு, பொன்னுசாமி கவுண்டர் வீதியில் மாநகராட்சி வைத்துள்ள ஊர்ப்பெயர் பலகை சேதமாகியுள்ளது.
- ராஜூ, மங்கலம் ரோடு. (படம் உண்டு)
ரோட்டோரம் கழிவு
திருப்பூர் - பல்லடம் ரோடு, டி.கே.டி., மில் ஸ்டாப் அருகே ரோட்டோரத்தில் குப்பை, காய்கறி கழிவுகள் கொட்டப்படுகிறது. குப்பைகளை அள்ள வேண்டும்.
- முருகன், பல்லடம் ரோடு. (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
தென்னம்பாளையம் ஸ்கூல் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.
- காயத்ரி, தென்னம்பாளையம். (படம் உண்டு)
அபாய டிரான்ஸ்பார்மர்
திருப்பூர், கே.பி.என்., காலனி, ஓம் சக்தி நகர் இரண்டாவது வீதியில் டிரான்ஸ்பார்மர் துருப்பிடித்து, ஆபத்தான நிலையில் உள்ளது.
- முகமது இம்தியாஜ், கே.பி.என்., காலனி. (படம் உண்டு)
தெரு நாய் தொல்லை
பல்லடம் - திருப்பூர் ரோடு, மகாலட்சுமி நகரில் தெருநாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்திக் கடிக்கின்றன.
- வெங்கடேஸ்வரன், மகாலட்சுமி நகர். (படம் உண்டு)
அங்கேரிபாளையம், விக்னேஸ்வரா பள்ளி வீதியில் தெருநாய்கள் அதிகமாக உள்ளது. ரோட்டில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.
- சுரேஷ், அங்கேரிபாளையம். (படம் உண்டு)
வாகனங்கள் தடுமாற்றம்
திருப்பூர், குமார் நகர், பிள்ளையார் கோவில் எதிரில் ரோடு குண்டும் குழியுமாக மண் நிறைந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் சென்று வர தடுமாறுகின்றனர். ரோடு போட வேண்டும்.
- முருகேசன், பிள்ளையார் நகர். (படம் உண்டு)
சுகாதாரச் சீர்கேடு
திருப்பூர், 58வது வார்டு, கே.செட்டிபாளையம், வெங்கடேஸ்வரா நகரில் சாக்கடை கால்வாய் இல்லை. கழிவுநீர் வீடுகள் முன் தேங்கி நிற்பதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
- சுரேஷ், வெங்கடேஸ்வரா நகர். (படம் உண்டு)
வீணாகும் மின்சாரம்
திருப்பூர், கருப்பகவுண்டம்பாளையம் - வெள்ளியங்காடு - முத்தையன் கோவில் பகுதியில் பகலிலும் தெருவிளக்கு எரிந்து மின்சாரம் வீணாகிறது. விளக்குகளை அணைத்து, மின்சாரததை சேமிக்க வேண்டும்.
- செல்வராஜ், முத்தணம்பாளையம். (படம் உண்டு)
ரியாக் ஷன்
சீரானது சாலை
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.பெரியபாளையம், ஏ.சி.எஸ்., மாடர்ன் சிட்டி, வெற்றிவேல் நகரில் சாலை சேதமாகியுள்ளது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.
- அழகுராஜ், எஸ்.பெரியபாளையம். (படம் உண்டு)
புதிய தொட்டி
திருப்பூர், 17வது வார்டு, இ.ஆர்.பி., நகர் பாரதிதாசன் வீதியில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி உடைந்து, தண்ணீர் வீணாகி வருவதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. புதிய தொட்டி, மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டு விட்டது.
- ரஞ்சித், பாரதிதாசன் வீதி. (படம் உண்டு)