sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திறக்காத கதவுகள்!

/

திறக்காத கதவுகள்!

திறக்காத கதவுகள்!

திறக்காத கதவுகள்!


ADDED : நவ 23, 2024 05:33 AM

Google News

ADDED : நவ 23, 2024 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் குமரன் நினைவிட மண்டபம் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக திறக்கப்படாமல், பூட்டி கிடப்பது, வேதனை அடையச் செய்கிறது.

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, சுதந்திர போராட்ட தியாகியான கொடி காத்த குமரனுக்கு நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில், குமரன் நினைவுத்துாண், குமரனின் மனைவியான ராமாயி அம்மாள் சமாதி உள்ளன. தனி மண்டபத்தில், குமரன் சிலை மற்றும் சுதந்திர போராட்ட வரலாற்று புத்தகங்கள் அடங்கிய நுாலகம், குமரனின் வரலாறு, சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன.

தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குமரன் நினைவிடம், தினமும் காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை செயல்படும். மக்கள் பலரும், குமரன் நினைவு வளாகத்திலுள்ள குமரன் சிலை, அவரது மனைவியின் சமாதியை பார்வையிடுவது. மலர் துாவி மரியாதை செலுத்துவது, புகைப்படங்களை பார்வையிட்டுச் செல்வது வழக்கம்.

குமரன் நினைவு வளாக செயல்பாட்டுக்காக வழிகாட்டி காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 13 நாளாக இவர், பணிக்கு வரவில்லை. இதனால், அருகிலுள்ள தள்ளுவண்டி கடைக்காரர்களே, காலையில் திறந்து, மாலையில் கதவை பூட்டுகின்றனர். ஆனால், நுாலகம், புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள மண்டப கதவுகள் பூட்டியே கிடக்கின்றன.

இதனால், நினைவிடத்துக்கு வருவோர், வளாகத்தை மட்டும் சுற்றிப்பார்த்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மண்டபத்துக்குள் செல்ல முடியாததால், குமரன் சிலையை பார்க்கவோ, நுாலகத்திலுள்ள புத்தகங்களை படிக்க, புகைப்படங்களை பார்வையிட முடிவதில்லை.

செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இவ்வாறு, தியாகி குமரன் மண்டபம் பத்து நாட்களுக்கும் மேலாக பூட்டி கிடப்பது, சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினரையும், பொதுமக்களையும் வேதனை அடையச் செய்கிறது. எனவே, இது விஷயத்தில், கலெக்டர் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இவ்வாறு, தியாகி குமரன் மண்டபம் பத்து நாட்களுக்கும் மேலாக பூட்டி கிடப்பது, பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது






      Dinamalar
      Follow us