sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'கனவு இல்லம்' திட்டம் வீடு கட்ட பணியாணை

/

'கனவு இல்லம்' திட்டம் வீடு கட்ட பணியாணை

'கனவு இல்லம்' திட்டம் வீடு கட்ட பணியாணை

'கனவு இல்லம்' திட்டம் வீடு கட்ட பணியாணை


ADDED : ஜூன் 12, 2025 01:10 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:

வரும் 2030க்குள், குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், மாநில அரசு கனவு இல்லம் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களில், ஆறு ஆண்டுகளில், எட்டு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். முதல்கட்டமாக, 2024 - 25ம் ஆண்டில், ஒரு வீட்டுக்கு, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், இத்திட்டத்தில், அவிநாசியில், 151 பேர், தாராபுரம் - 191, குடிமங்கலம் - 304, மடத்துக்குளம் - 236, மூலனுார் - 146, பல்லடம் -- 281, பொங்கலுார் - 136, குண்டடம் - 215, திருப்பூர் ஒன்றியம் - 171, வெள்ளகோவில் - 276, உடுமலை - 346, ஊத்துக்குளி - 176 பேருக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மூலம், கனவு இல்லம் மற்றும் ஊரக பழுது பார்த்தல் திட்டங்களில், 5,186 பயனாளிகளுக்கு, மொத்தம் 105.36 கோடி மதிப்பீட்டில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us