sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அபாய வளைவுகள் மேம்படுத்த ஓட்டுநர்கள் வேண்டுகோள்

/

அபாய வளைவுகள் மேம்படுத்த ஓட்டுநர்கள் வேண்டுகோள்

அபாய வளைவுகள் மேம்படுத்த ஓட்டுநர்கள் வேண்டுகோள்

அபாய வளைவுகள் மேம்படுத்த ஓட்டுநர்கள் வேண்டுகோள்


ADDED : மார் 03, 2024 12:34 AM

Google News

ADDED : மார் 03, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை;ஆனைமலை ரோட்டிலுள்ள அபாய வளைவுகளை மேம்படுத்தி, விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், முக்கோணம் பகுதியில் பிரிந்து, ஆனைமலை செல்லும் ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ், நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடத்தில், பாப்பனுாத்து, சாளையூர், கொடிங்கியம், எரிசனம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன.

தென் மாவட்டங்களிலிருந்து, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியர் அதிகளவு இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து மிகுந்த இந்த ரோட்டில், அபாய வளைவு பகுதிகள் அதிகளவு உள்ளன.

முக்கோணத்திலிருந்து வாளவாடி செல்லும் ரோடு பிரியும் பகுதி, ரயில்வே கேட் அருகில், சாளையூரிலிருந்து உடுக்கம்பாளையம் ரோடு பிரியும் பகுதி, அதே பகுதியில், மழை நீர் ஓடை குறுக்கிடும் பகுதி என ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் அபாய வளைவுகள் உள்ளன.

ரோடு குறுகலாக இருப்பதால், இந்த வளைவுகளில், விபத்துகள் தொடர்கதையாக உள்ளது. கனரக வாகனங்கள் அவ்வழியாகச்செல்லும் போது, பிற வாகனங்கள், விலகிச்செல்ல முடிவதில்லை.

இவ்வழித்தடத்தில், ஆனைமலை, வேட்டைகாரன்புதுார், உடுக்கம்பாளையம், வல்லக்குண்டாபுரம், தேவனுார்புதுார் உட்பட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரோட்டை மேம்படுத்த வேண்டும் என்ற நீண்ட காலமாக வலியுறுத்தியும், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.






      Dinamalar
      Follow us