ADDED : ஜூன் 24, 2026 04:48 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்:காங்கேயத்தை
அடுத்த மறவபாளையம் பஞ்., திட்டம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி,
43; டிரைவராக பணியாற்றி வந்தார். மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.
குடிப்பழக்கத்தால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டில் போதையில் தகராறு செய்ததால்,
குழந்தைகளுடன் மனைவி வெளியே சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக
இருந்த கார்த்தி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காங்கேயம்
போலீசார் விசாரிக்கின்றனர்.
