ADDED : நவ 24, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: வெள்ளகோவில் முருங்கை மார்க்கெட்டுக்கு, 500 கிலோ வரத்து இருந்தது. கிலோ, 250 ரூபாய்க்கு விற்பனையானது.
வெள்ளகோவிலில் இயங்கும் கொள்முதல் நிலையம் மூலம் சென்னை, கோவை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு முருங்கைக்காய்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த வாரம், 3 டன் வந்தது. கிலோ, 100 ரூபாய்க்கு விற்றது.
நேற்று, 500 கிலோ வந்தது. செடி முருங்கை, கிலோ 130 ரூபாய்க்கும், மர முருங்கை, 170 ரூபாய்க்கும், கரும்பு முருங்கை, 250 ரூபாய்க்கும் விற்பனையானது.
கடந்த வாரத்தை விட, நேற்று கிலோவுக்கு, 150 ரூபாய் அதிகரித்து விற்பனையானது.
கடந்த வாரங்களில் பெய்த மழையால் பூக்கள் உதிர்ந்ததால், வரத்து குறைந்தது. இதனால், விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

