/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி அருகே 'குடி'மகன்கள் அட்டகாசம் கேள்விக்குறியாகும் மாணவியர் பாதுகாப்பு
/
பள்ளி அருகே 'குடி'மகன்கள் அட்டகாசம் கேள்விக்குறியாகும் மாணவியர் பாதுகாப்பு
பள்ளி அருகே 'குடி'மகன்கள் அட்டகாசம் கேள்விக்குறியாகும் மாணவியர் பாதுகாப்பு
பள்ளி அருகே 'குடி'மகன்கள் அட்டகாசம் கேள்விக்குறியாகும் மாணவியர் பாதுகாப்பு
ADDED : ஜன 21, 2025 10:20 PM

உடுமலை, ; உடுமலை நகரில், பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, 'குடி'மகன்கள் தொல்லை அதிகரிப்பதால், மாணவியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
உடுமலை - தளி ரோடு மேம்பாலத்தின் கீழ், பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளி அருகே உள்ள, சுரங்கப்பாலத்தின் அருகில் அமர்ந்து கொண்டு, பலரும் மாலை நேரங்களில் மது அருந்துகின்றனர்.
மது பாட்டில்களையும், அதன் கழிவுகளையும் பள்ளியின் அருகில் வீசிச்செல்கின்றனர். தொடர்ந்து 'குடி'மகன்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், அப்பகுதியினர் வேதனைக்குள்ளாகின்றனர்.
சிறப்பு வகுப்புகள் முடிந்து, மாலை நேரங்களில் அவ்வழியாக மாணவியர் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் கழிவுகளால், மிகுதியான துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில், காலை நேரங்களிலும் இந்த அவலம் அரங்கேறுகிறது. மது அருந்திவிட்டு, பாட்டில்களை சுரங்கப்பாதையிலும் வீசி செல்கின்றனர். அவ்வழியாக நடந்து செல்வோர் பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கு எப்போது தான் விடிவு கிடைக்கும் என, அப்பகுதி மக்கள் வேதனையடைந்து வருகின்றனர். பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத வகையில், அரசு பள்ளிக்கு அருகில் இவ்வாறு சுதந்திரமாக மது அருந்துவதை தடுக்க, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவியரின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்துள்ளனர்.