ADDED : பிப் 17, 2025 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு நேற்று காதொலி கருவி வழங்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்ட நிகழ்ச்சியில், கலெக்டர் கிறிஸ்துராஜ், பயனாளிகள் 2 பேருக்கு, மொத்தம் 9,855 ரூபாய் மதிப்பிலான காதொலி கருவிகளையும், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், ஒரு பயனாளிக்கு 35 ஆயிரம் ரூபாய் இயற்கை மரண உதவித்தொகையும் வழங்கினார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகாராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.