/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்வியே மனிதருக்கு உயர்வை தரும் கல்லுாரி; கல்வி இணை இயக்குனர் பேச்சு
/
கல்வியே மனிதருக்கு உயர்வை தரும் கல்லுாரி; கல்வி இணை இயக்குனர் பேச்சு
கல்வியே மனிதருக்கு உயர்வை தரும் கல்லுாரி; கல்வி இணை இயக்குனர் பேச்சு
கல்வியே மனிதருக்கு உயர்வை தரும் கல்லுாரி; கல்வி இணை இயக்குனர் பேச்சு
ADDED : செப் 02, 2025 08:59 PM

உடுமலை; ''கல்வி ஒருவருக்கு மிக உயர்ந்த மாற்றத்தைத் தரக்கூடியது'' என. கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் செண்பகலெட்சுமி பேசினார்.
உடுமலை அரசு கலைக்கல்லூரியின், முன்னான் மாணவர் சங்க அறக்கட்டளை சார்பில், 25வது ஆண்டாக, சிறந்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளையின் செயலர் ஆடிட்டர் கந்தசாமி, தலைவர் ஆடிட்டர் கண்ணன், முன்னாள் மாணவரும், சிக்கண்ணா கல்லுாரி முதல்வருமான கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
கோவை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் செண்பகலெட்சுமி, துறை வாரியாக முதன்மை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது: 'கல்வி என்பது ஒருவருக்கு மிக உயர்ந்த மாற்றத்தைத் தரக்கூடியது. அறிவை மேம்படுத்த உதவும் கருவியாகும். கல்வி ஏழு தலைமுறைக்கும் நன்மை தரக்கூடியது. சமுதாயத்தில் சாதனைகள் நிகழ்த்தவும், பலவற்றைச் சாதிக்கவும், எதனையும் எதிர்கொண்டு போராடவும் கல்வி உதவுகிறது.
கல்வியைத் தந்த கல்லூரியை, ஒருபோதும் ஒரு நாளும் மறந்துவிடக்கூடாது. கல்லூரியில் படித்த நாட்கள் பசுமையானவை. அந்த நினைவுகளுடன் நம்மை இணைக்கக்கூடிய சக்திதான் முன்னாள் மாணவர் சங்கம்.
உயரத்தைத் தொட்ட முன்னாள் மாணவர்களையும், உயரம் தொடமுயற்சிக்கும் இந்நாள் மாணவர்களையும் இணைக்கும் பாலமாக விளங்கும் முன்னான் மாணவர் சங்கத்துடன் இணைந்து கல்லூரி வளர பாடுபடுங்கள்.
இவ்வாறு, பேசினார்.
விழாவில், இளநிலைப்பட்டவகுப்புகளில் பாரதியார் பல்கலைக்கழகத்தேர்வுகளில் முதன்மை பெற்ற, 14 மாணவர்களுக்கும், முதுநிலைப்பட்ட வகுப்புகளில் முதன்மை பெற்ற, 10 மாணவர்களுக்கும், ரொக்கப்பரிசாக தலா ரூ. 3ஆயிரம், சான்றிதழும் வழங்கப்பட்டன.மேலும், கூடுதல் பரிசாக இளம் வணிகவியல் துறை மாணவிக்கு, ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. அறக் கட்டளையி ன் சட்ட ஆலோசகர் வக்கீல் ராஜேந்திரன், சுரேஷ்,
பேராசிரியர்கள் அபுபக்கர், முகம்மது ஜாபர், கலைச்செல்வன்,ஜோசப், சிக்கந்தர் மற்றும் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் பங்கேற்றனர்.