sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர்களை நெருங்கும் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க முயற்சி

/

மாணவர்களை நெருங்கும் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க முயற்சி

மாணவர்களை நெருங்கும் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க முயற்சி

மாணவர்களை நெருங்கும் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க முயற்சி


ADDED : பிப் 18, 2024 11:59 PM

Google News

ADDED : பிப் 18, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:பள்ளிகளில், பொதுத்தேர்வில் கேட்கப்படும் முக்கியமான வினாக்களை தேர்வு செய்து, மாணவர்களுக்கு தீவிர பயிற்சியளிக்கப்படுகிறது.

பத்து, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ள நிலையில், மாணவர்களை தேர்ச்சி பெறச்செய்யவும், பள்ளி அளவில் நுாறு சதவீதம் தேர்ச்சியை பதிவு செய்யும் நோக்கிலும் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

பொதுத்தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சியை பதிவு செய்வது என்பது, பள்ளிகளின் அந்தஸ்து சார்ந்த விஷயமாகவும் மாறிப்போயிருக்கிறது. இதனால், தேர்வை பொறுப்புடன் எழுதி, மதிப்பெண்களை அள்ளிக்குவிக்க மாணவ, மாணவியரை ஆசிரியர்கள் தயார்படுத்தி வருகின்றனர்.

இதேபோல, பெரும்பாலான தனியார் பள்ளிகள், 9ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியருக்கு, அந்தாண்டின், டிச., மாதத்தில் இருந்தே, 10ம் வகுப்புக்கான பாடங்களை கற்பிக்க துவங்கி விடுகின்றனர்.

10, 11, மற்றும், 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, மாலை நேரங்களில், 6:00 மணி வரை கூட சிறப்பு வகுப்பெடுக்கின்றனர்.

தேர்வு நெருங்கும் சமயத்தில், ஞாயிறன்று கூட, பள்ளிகளுக்கு மாணவ, மாணவியரை வரவழைத்து, சிறப்பு வகுப்பு எடுக்கப்படுகிறது.

கற்பித்து முடித்த பாடங்களை மறு நினைவூட்டல் செய்ய வைத்து, வகுப்புத்தேர்வு நடத்தி, அவர்களின் மதிப்பெண் பெறும் திறமையை பரிசோதிக்கின்றனர்.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பொதுத்தேர்வில் கேட்கப்படும் முக்கியமான வினாக்களை தேர்வு செய்து, மாணவர்களுக்கு வழங்கும் ஆசிரியர்கள், அந்த வினாக்களை நல்ல முறையில் படிக்க மாணவர்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர்.

ஆசிரியர்கள் கூறியதாவது: மாணவ, மாணவியரின் உயர்கல்வி, அதுசார்ந்த வேலை வாய்ப்புக்கு அடித்தளமாக அமையவிருக்கிற பொதுத்தேர்வு விரைவில் நடத்தப்பட இருக்கிறது.

நன்றாக படிக்கும் மாணவர்களை பள்ளி தர வரிசையில் முதலிடத்துக்கு கொண்டு வருவது; சுமாராக படிக்கும் மாணவர்களை, 50 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெறச்செய்வது கல்வியில் மிக பின்தங்கிய மாணவர்களை எப்படியாகிலும் 'பாஸ் மார்க்' வாங்கச்செய்வது, என்ற மனநிலையில் பெரும்பாலான ஆசிரியர்கள் செயல்படுகின்றனர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us