ADDED : ஜூன் 22, 2025 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: உடுமலை ஜி.டி.வி லே-அவுட் செல்வ விநாயகர் கோவிலில், ஏகாதசியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
இக்கோவிலில் காலையில் மகாவிஷ்ணு சுவாமிக்கு, அபிேஷக ஆராதனையும், மாலையில் விக்னேஸ்வர பூஜையும் நடந்தது. தொடர்ந்து ஸங்கல்பம், பீட பூஜை, அர்ச்சனை, ஆராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் செய்தனர். உலக நன்மைக்கா பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.