sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தயாராகும் தேர்தல் பிரிவு அதிகாரிகள்

/

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தயாராகும் தேர்தல் பிரிவு அதிகாரிகள்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தயாராகும் தேர்தல் பிரிவு அதிகாரிகள்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தயாராகும் தேர்தல் பிரிவு அதிகாரிகள்


ADDED : அக் 27, 2025 09:56 PM

Google News

ADDED : அக் 27, 2025 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்வதற்காக, தேர்தல் கமிஷன் அறிவிப்பை எதிர்பார்த்து, திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், உடுமலை ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. எட்டு தொகுதிகளில் மொத்தம், 24 லட்சத்து 27 ஆயிரத்து 50 வாக்காளர்கள், பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

2026ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ள, மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

தேர்தல் பிரிவினர் கூறியதாவது:

பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளரையும் சரிபார்க்கும் வகையில், தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டு வருகிறது.

பீஹார் மாநிலத்தை போலவே, தமிழகத்திலும் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்புகளை, தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது.

பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், அந்தந்த பி.எல்.ஓ.,க்கள் (ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்) வாயிலாக, வீடு தேடிச் சென்று, தீவிர திருத்தத்துக்கான படிவம் வழங்கப்படும். வாக்காளர்கள் அந்த படிவத்தில் கையெழுத்திட்டு, தேர்தல் கமிஷன் குறிப்பிடும், 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

அதனடிப்படையில், வாக்காளர் வரைவு பட்டியல் தயாரிக்கப்படும். விடுபட்டோருக்கு, கூடுதல் அவகாசங்களும் வழங்கப்படும்.

நியமனப்பணிகள் திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 2,536 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் (பி.எல்.ஓ.,) பணி முக்கியமானதாக உள்ளது.

ஓய்வு பெற்றவர்களுக்கு பதிலாக புதியவர்களை நியமிப்பது போன்ற, நியமன பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

தேர்தல் கமிஷனிடமிருந்து அறிவிப்பு வெளியானபின்னர், பி.எல்.ஓ.,க்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, களப்பணிகள் மேற்கொள்ளப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us