/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் வாரிய அதிகாரிகள் போராட்டம்
/
மின் வாரிய அதிகாரிகள் போராட்டம்
ADDED : பிப் 28, 2026 08:17 AM

உடுமலை: உடுமலையில் மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். குரூப், 1, 2 நிலை அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு தேவையில்லை என்ற பரிந்துரையை நீக்க வேண்டும், ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி, மின் வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் என அனைத்து அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில், மின் வாரிய அனைத்து அலுவலர்கள் சங்கம், மின்சார தொழிலாளர் சம்மேளனம், பொறியாளர் சங்கம், பொறியாளர் யூனியன், சி.ஐ.டி.யு., டி.என்.இ.பி.எப்., ஏ.ஐ.எல்.யு., மற்றும் ஐக்கிய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

