ADDED : ஆக 04, 2025 07:44 PM
உடுமலை; உடுமலை கோட்டத்துக்குட்பட்ட மின்நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் நாளை (6ம் தேதி) ஏரிப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் நடக்கிறது.
உடுமலை கோட்டத்திலுள்ள மின்நுகர்வோர், தங்களது குறைகளை தெரிவித்து, நிவர்த்தி பெறும் வகையில், குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், இம்மாதத்திற்கான கூட்டம் நாளை நடைபெறுகிறது.
இதுகுறித்து, மின்வாரியம் உடுமலை கோட்ட செயற்பொறியாளர் மூர்த்தி கூறியிருப்பதாவது: உடுமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் நாளை நடக்கிறது.
இக்கோட்டத்துக்குட்பட்ட மின் நுகர்வோர் தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். காலை 11:00 மணிக்கு ஏரிப்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இந்த கூட்டம் துவங்கும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோரும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.