sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஆங்கில புத்தாண்டு சர்ச்களில் பிரார்த்தனை

/

 ஆங்கில புத்தாண்டு சர்ச்களில் பிரார்த்தனை

 ஆங்கில புத்தாண்டு சர்ச்களில் பிரார்த்தனை

 ஆங்கில புத்தாண்டு சர்ச்களில் பிரார்த்தனை


ADDED : ஜன 01, 2026 05:27 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்ச்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நள்ளிரவு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது.ஆங்கில புத்தாண்டை ஒட்டி வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். சர்ச்களில், நேற்றிரவு, 11:00 மணி முதல், 12.00 வரை ஆராதனை நடத்தப்பட்டது.

கடந்தாண்டு முழுக்க இறைவன் செய்த நன்மைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக ஆராதனை நடத்தப்பட்டது. நள்ளிரவு, 12:00 மணிக்கு புத்தாண்டு சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடத்தப்பட்டது. குளிரையும் பொருட்படுத்தாமல், ஏராளமானோர் திருப்பலியில் பங்கேற்றனர்; இன்று காலையும், திருப்பலி நடத்தப்படும். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாறப்பட்டன.

திருப்பூர் குமரன் ரோடு கேத்தரீனம்மாள் சர்ச், குமார் நகர், புனித ஜோசப் சர்ச், பூமலுார் புனித அந்தோணியார் சர்ச், பல்லடம் புனித வேளாங்கண்ணி சர்ச், அவிநாசி புனித தோமையார் சர்ச், லுார்துபுரம் அன்னை சர்ச், குமார் நகர் புனித பால் சர்ச், நல்லுார் யூக்கரிஸ்ட் சர்ச், திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, டி.இ.எல்.சி., சர்ச் உட்பட அனைத்து கத்தோலிக்க, சி.எஸ்.ஐ., மற்றும் பிற சபை சார்ந்த தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடு நடத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us