sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தொழில் முனைவோரான துாய்மை பணியாளர்கள்

/

தொழில் முனைவோரான துாய்மை பணியாளர்கள்

தொழில் முனைவோரான துாய்மை பணியாளர்கள்

தொழில் முனைவோரான துாய்மை பணியாளர்கள்


ADDED : ஜூலை 01, 2025 11:47 PM

Google News

ADDED : ஜூலை 01, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்கள் வாழ்வாதாரம் உயர்த்தும் வகையில், அவர்களுக்கு வங்கி கடன் வாயிலாக வாகனங்கள் வாங்கி, துாய்மைப் பணிக்கு பயன் படுத்திக் கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில் திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்களுக்கு ஒரு குழுவாக வங்கி கடன் பெற்று கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் சொந்தமாக வாங்கி தரப்படுகிறது.

இந்த வாகனத்தை மாநகராட்சி நிர்வாகம், வாடகை அடிப்படையில், துாய்மைப் பணிக்கு பயன்படுத்திக் கொண்டு, அதற்கான வாடகை தொகை, நேரடியாக வங்கியின் கடன் கணக்கில் செலுத்தப்படுகிறது.

இதுபோல் நான்கு வாகனங்கள் தற்போது திருப்பூர் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அது போல் நேற்று ஒரு புதிய வாகனம் வழங்கப்பட்டு, அதன் பணி துவக்கி வைக்கப்பட்டது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் இந்த வாகனத்தை மேயர் தினேஷ்குமார், கமிஷனர் அமித் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

துணை மேயர் பாலசுப்ரமணியம், சுகாதார குழு தலைவர் கவிதா, மாநகர் நகர்நல அலுவலர் முருகானந்த், உதவி கமிஷனர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us