sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தொழில்முனைவோராகும் துாய்மை பணியாளர்கள்

/

தொழில்முனைவோராகும் துாய்மை பணியாளர்கள்

தொழில்முனைவோராகும் துாய்மை பணியாளர்கள்

தொழில்முனைவோராகும் துாய்மை பணியாளர்கள்


ADDED : பிப் 23, 2024 12:14 AM

Google News

ADDED : பிப் 23, 2024 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;நலவாரியம் மூலம் வாங்கிய வாகனத்தை மாநகராட்சிக்கு வாடகைக்கு விட்டு, துாய்மைப் பணியாளர்கள் தொழில் முனைவோராக மாறியுள்ளனர்.

துாய்மைப் பணியாளர் நல வாரியம் சார்பில், துாய்மைப் பணியாளர்கள் பயன் பெறும் விதமாகவும், அவர்களை தொழில் முனைவோராக முன்னேற்றும் வகையிலும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சியை சேர்ந்த துாய்மைப் பணியாளர்கள் பயன்பெறும் விதமாக, 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவு நீர் அகற்றும் வாகனம், பாங்க் ஆப் பரோடா வங்கி கடன் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம் திருப்பூர் மாநகராட்சி பகுதியில், கழிவு நீர் அகற்றும் பணிக்கு வாடகை அடிப்படையில் பயன்படுத்தப்படும். இதன் பயன்பாட்டை நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மாநகர் நல அலுவலர் கவுரி சரவணன், கவுன்சிலர் கவிதா, நவ ஜீவன் அமைப்பு மற்றும் வங்கி அலுவலர்கள், மாநகராட்சி சுகாதார பிரிவினர் கலந்து கொண்டனர்.

இதற்கான வாடகையை மாநகராட்சி சார்பில் வங்கி கணக்கில் செலுத்தப்படும். வாகனத்துக்கான மாத தவணைக்கு மேல் உள்ள தொகை, துாய்மைப் பணியாளர்கள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும். அவ்வகையில், மாநகராட்சிக்கு குறைந்த வாடகையில் வாகனம் கிடைப்பதோடு, துாய்மைப் பணியாளர்களும் பயன் பெறுவர்.






      Dinamalar
      Follow us