sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரயில்வே ஸ்டேஷனில் காட்சிப்பொருளாக எஸ்கலேட்டர்

/

ரயில்வே ஸ்டேஷனில் காட்சிப்பொருளாக எஸ்கலேட்டர்

ரயில்வே ஸ்டேஷனில் காட்சிப்பொருளாக எஸ்கலேட்டர்

ரயில்வே ஸ்டேஷனில் காட்சிப்பொருளாக எஸ்கலேட்டர்


ADDED : ஜூன் 12, 2025 11:22 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 11:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; ''திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நிறுவப்பட்டுள்ள இரண்டாவது எஸ்கலேட்டரை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்'' என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் இரண்டாவது பிளாட்பார்மில், எஸ்கலேட்டர் நிறுவும் பணி, 2024 ஜூன் மாதம் துவங்கியது. புஷ்பா தியேட்டர் ரவுண்டானா ஸ்டாப், அவிநாசி ரோடு, பி.என்., ரோடு வழியாக வருபவர்கள் நுழைவு வாயில் வழியாக செல்லாமல், நேரடியாக உயர்மட்ட பாலம், முதல் பிளாட்பார்ம் செல்ல ஏதுவாக எஸ்கலேட்டர் நிறுவும் பணி நடந்தது.

உபகரணங்கள் பொருத்தும் பணி ஜனவரியில் முழுமையாக முடிந்த நிலையில், செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் இருந்தது. கடந்த, மார்ச் மாதம் ஆய்வு நடத்திய சேலம் ரயில்வே கோட்ட பொறியாளர் குழுவினர், ''தரைத்தளத்தை உயர்த்திக் கட்டாவிட்டால், எஸ்கலேட்டர் வேகமாக இயக்குவதில் சிரமம் ஏற்படும்; பணிகளை விரைந்து முடித்து, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்'' என அறிவுரை வழங்கினர்.

ஆனால், மூன்று மாதமாகியும், எஸ்கலேட்டர் அப்படியே உள்ளது. யாரும் இதில் ஏறி செல்லாமல் இருக்க தற்காலிகமாக தடுப்பு வைத்து மறைப்பு ஏற்படுத்தியுள்ளனர். இரவில் விரும்பத்தகாத செயல்கள் நடக்கிறது. திறந்த வெளியாக இருப்பதால், அசுத்தமாகியும் வருகிறது. விரைவில் எஸ்கலேட்டர் திறக்கப்பட வேண்டும்.






      Dinamalar
      Follow us