sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இ.எஸ்.ஐ., நடமாடும் மருத்துவ வாகனம் மாயம் : தொழிலாளர்கள் அதிர்ச்சி

/

 இ.எஸ்.ஐ., நடமாடும் மருத்துவ வாகனம் மாயம் : தொழிலாளர்கள் அதிர்ச்சி

 இ.எஸ்.ஐ., நடமாடும் மருத்துவ வாகனம் மாயம் : தொழிலாளர்கள் அதிர்ச்சி

 இ.எஸ்.ஐ., நடமாடும் மருத்துவ வாகனம் மாயம் : தொழிலாளர்கள் அதிர்ச்சி


ADDED : டிச 18, 2025 07:44 AM

Google News

ADDED : டிச 18, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை இ.எஸ்.ஐ., மருத்துவமனை வாயிலாக இயக்கப்பட்டு வந்த நடமாடும் மருந்தக வாகனம், இரு மாதமாக முடங்கியுள்ளதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், நுாற்பாலைகள், காகித ஆலைகள், கயிறு உற்பத்தி ஆலைகள் என ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

கோவை மண்டலம், திருப்பூர் மாவட்டத்திலுள்ள, உடுமலை தாலுகா இ.எஸ்.ஐ., மருந்தகம் சார்பில், நடமாடும் மருந்தகம், ஏறத்தாழ, 70 ஆண்டுகளாக இயங்கி வந்தது.

உடுமலை சுற்றியுள்ள, பூலாங்கிணறு, முக்கோணம், பெதப்பம்பட்டி, குடிமங்கலம், மைவாடி, எஸ்.வி., புரம், கண்ணமநாயக்கனுார், சடையபாளையம் என அனைத்து கிராமங்களுக்கும் சென்று, ஏறத்தாழ, 4 ஆயிரம் தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

தற்போது, இரு மாதமாக நடமாடும் மருந்தக வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர் சிகிச்சைக்கு டாக்டர்கள் வராததால், மருத்துவ சிகிச்சை மற்றும் மாதம் தோறும் பெறும் மாத்திரைகளுக்காக தொழிலாளர்கள் உடுமலை வர வேண்டியுள்ளது.

நடமாடும் மருத்துவ வாகனம் கிராமங்களுக்கு இயக்கப்படாததற்கு, அந்த வாகனம், 22 ஆண்டு பழமையானது. அதனால், பழுது பார்த்து, எப்.சி., காட்ட வேண்டியுள்ளது. வாகனம் பழுதானதாலும், வாகனப்பதிவு புதுப்பிக்காததாலும் வாகனத்தை இயக்க முடிவதில்லை, என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே, நடமாடும் மருத்துவ வசதிக்காக, புதிய வாகனம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், என ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் மூர்த்தி, இ.எஸ்.ஐ.,திட்ட இயக்குனருக்கு மனு அனுப்பியுள்ளார்.






      Dinamalar
      Follow us