/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முன்னாள் படை வீரர் குறைகேட்பு கூட்டம்
/
முன்னாள் படை வீரர் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஜூன் 09, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை கேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.
மாலை, 4:00 மணிக்கு துவங்கும் கூட்டத்தில், மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், படையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்று, குறைகளை தெரிவிக்கலாம். கூட்டத்தில் பங்கேற்போர், முன்னதாக, மாலை, 3:30 மணிக்கு, தங்கள் கோரிக்கைகளின் இரண்டு பிரதிகளை சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர்கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.