sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பஞ்சலிங்க அருவியில் உற்சாகம்; 11 நாட்களுக்கு பின் மக்கள் அனுமதி

/

பஞ்சலிங்க அருவியில் உற்சாகம்; 11 நாட்களுக்கு பின் மக்கள் அனுமதி

பஞ்சலிங்க அருவியில் உற்சாகம்; 11 நாட்களுக்கு பின் மக்கள் அனுமதி

பஞ்சலிங்க அருவியில் உற்சாகம்; 11 நாட்களுக்கு பின் மக்கள் அனுமதி


ADDED : டிச 24, 2024 07:38 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவிக்கு, 11 நாட்களுக்கு பின் நேற்று முதல், சுற்றுலா பயணியர், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது.

திருமூர்த்திமலைப்பகுதிகளில் பெய்த கன மழையால், மலைமேலுள்ள பஞ்சலிங்க அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், பாதுகாப்பு கருதி, கடந்த, 12ம் தேதி முதல், பக்தர்கள், சுற்றுலா பயணியர் அருவிக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

தொடர்ந்து, அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்ததால், 11 நாட்களாக தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று நீர்வரத்து சீரானது. இதனையடுத்து, அருவிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

தற்போது, சபரிமலை ஐயப்ப சீசன் துவங்கியுள்ளதால், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து, ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருவதால், சீசன் களை கட்டியுள்ளது.

நேற்று, நுாற்றுக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அதே போல், மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு,பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பு பணியில் கோவில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us