sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பருத்தி சாகுபடி உயர அரசு உதவ எதிர்பார்ப்பு

/

பருத்தி சாகுபடி உயர அரசு உதவ எதிர்பார்ப்பு

பருத்தி சாகுபடி உயர அரசு உதவ எதிர்பார்ப்பு

பருத்தி சாகுபடி உயர அரசு உதவ எதிர்பார்ப்பு


ADDED : ஏப் 29, 2025 06:34 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் பருத்தி சாகுபடி பிரதானமாக இருந்தது. பி.ஏ.பி., பாசனத்துக்கும், மானாவாரியாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கரில், பருத்தி சாகுபடி செய்தனர்.

குறுகிய, நீண்ட இழை மற்றும் மிக நீண்ட இழை பருத்தி ரகங்கள், ஆண்டுதோறும் பயிரிடப்பட்டது.

நிலையில்லாத விலை, ஆட்கள் பற்றாக்குறை, பி.ஏ.பி., திட்டம் விரிவாக்கம், நோய்த்தாக்குதல் உட்பட காரணங்களால், பருத்தி சாகுபடி பரப்பு வேகமாக குறையத்துவங்கியது.

கடந்த, 2009ல், மீண்டும் பருத்தி பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டினர். அப்போது, ஏற்றுமதி வாய்ப்புகள் உட்பட காரணங்களால் நல்ல விலை கிடைத்தது. இதனால், சாகுபடி பரப்பு, நுாற்றுக்கணக்கான ஏக்கர் அதிகரித்தது.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, பருத்திக்கு போதிய விலை கிடைக்காமல், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த சீசனில், பருத்தி பயிரிட யாரும் ஆர்வம் காட்டவில்லை. வரும் காரீப் பருவத்தில் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு உதவ எதிர்பார்ப்பு நிலவுகிறது.






      Dinamalar
      Follow us