ADDED : பிப் 13, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, டி.எம்.எஸ்., நான்காவது வீதியை சேர்ந்தவர் பாலமுருகன், 47. இவர் காஸ் நிறுவனத்தில் சிலிண்டர் சப்ளை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை பொங்குபாளையத்தில் உள்ள காஸ் குடோனில், 53 சிலிண்டர்களை எடுத்து கொண்டு போயம்பாளையம், காளிபாளையம் மற்றும் பெருமாநல்லுார் ஆகிய பகுதிகளில் சப்ளை செய்துள்ளார்.
இரவு காஸ் குடோனுக்கு சென்று உடன் பணிபுரியும் நபர்களிடமிருந்து, பெறப்பட்ட வசூல் தொகை 3 லட்சத்து, 17 ஆயிரத்து, 619 ரூபாயை பையில் வைத்து கொண்டு பைக்கில், தனது அலுவலகத்துக்கு சென்றார்.
பி.என்., ரோடு அண்ணா நகர் அருகே சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர் பணப்பையை பறித்து கொண்டு தப்பினர். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.