sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பூசணி விலை சரிவால் விவசாயிகள் கவலை

/

பூசணி விலை சரிவால் விவசாயிகள் கவலை

பூசணி விலை சரிவால் விவசாயிகள் கவலை

பூசணி விலை சரிவால் விவசாயிகள் கவலை


ADDED : செப் 22, 2024 11:45 PM

Google News

ADDED : செப் 22, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலையில், பூசணிக்காய் கொள்முதல் விலை திடீர் சரிவால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், பரவலாக பூசணி சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, தாந்தோணி, துங்காவி, சின்னப்பன்புதுார் உள்ளிட்ட கிராமங்களில், ஆண்டுக்கு இரு சீசன்களில், பூசணி சாகுபடியில், விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.

பூசணி சாகுபடிக்கான உகந்த நிலம், குறைந்த நீர் தேவை, தொழிலாளர் குறைந்தளவே தேவைப்படுவதாலும், நிலையான விலை இருப்பதாலும், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இங்கு விளையும் பூசணி, விற்பனைக்காக அதிகளவு வடமாநிலங்களுக்கும், கேரளாவுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. உடுமலை பகுதிகளில், தற்போது சாம்பல் பூசணி அறுவடை நடந்து வரும் நிலையில், தொடர் விலை சரிவால் விவசாயிகள் பாதித்துள்ளனர்.

திருமணம் உள்ளிட்ட விேஷச நாட்கள் மற்றும் கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக, கடந்த வாரம், கிலோ, 10 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது.

பண்டிகை சீசன் முடிந்துள்ளதால், தற்போது, கிலோ, 3 முதல், 5 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் பாதித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us