sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கொத்தமல்லி சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்

/

கொத்தமல்லி சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்

கொத்தமல்லி சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்

கொத்தமல்லி சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்


ADDED : அக் 29, 2024 09:07 PM

Google News

ADDED : அக் 29, 2024 09:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. புரட்டாசி மாதம் மற்றும் முகூர்த்த சீசனில், காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

எனவே, அந்த சீசனை இலக்காக வைத்து, தக்காளி, கத்தரி, வெண்டை உட்பட சாகுபடிகளுக்கான பணிகளை மேற்கொள்கின்றனர்.

மேலும், தழை தேவைக்காக, கொத்தமல்லி சாகுபடியும் செய்கின்றனர். இதற்காக வீரிய ரக விதைகள் பயன்படுத்தப்படுகிறது. ஏக்கருக்கு, 12 கிலோ வரை விதைகளை பயன்படுத்தி நடவு செய்து, சொட்டு நீர் பாசன முறையில், தண்ணீர் வழங்குகின்றனர்.

செடிகளை, 45 நாட்கள் வரை பராமரித்து, அறுவடை செய்து, கட்டுகளாக கட்டி, விற்பனை செய்கின்றனர். ஐப்பசி மாதத்தில், முகூர்த்த சீசனில், தழை கொத்தமல்லிக்கு, நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us