/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
18ல் விவசாயிகள் குறைகேட்பு; குறையின்றி நடைபெறுமா?
/
18ல் விவசாயிகள் குறைகேட்பு; குறையின்றி நடைபெறுமா?
ADDED : ஜூலை 09, 2025 11:03 PM
திருப்பூர்; திருப்பூரில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது.
அறை எண்: 240ல், காலை, 10:30 மணிக்கு துவங்கி, கூட்டம் நடைபெறும். கலெக்டர் மனிஷ் நாரணவரே, நேரடியாக விவசாயிகளின் குறைகளை கேட்டறிகிறார்.
விவசாயிகள் சிலர் கூறியதாவது:
குறைகேட்பு கூட்டத்துக்காக, மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள், காலை, 9:30 மணி முதலே, கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு வந்து விடுகின்றனர்.
காலை 10:30 மணிக்கு குறைகேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும் கூட, 11:00 மணிக்குப்பின்னரே கலெக்டர் உள்பட வேளாண் உயர் அதிகாரிகள் கூட்ட அரங்கிற்கு வருகின்றனர்.
அதேபோல், அனைத்து அரசு துறைகளிலும் மாவட்ட அளவில் முதல்நிலை அதிகாரிகள் பங்கேற்பதில்லை; இரண்டு, மூன்றாம் நிலை அலுவலர்களை அனுப்புகின்றனர். சில துறைகளில் எந்த அதிகாரியும் பங்கேற்பதில்லை. கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் குறித்த விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க, அதிகாரிகள் யாரும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
குறைகேட்பு கூட் டத்தை, சரியான நேரத்தில் துவக்க வேண்டும்; பிரச்னைகளை தெரிவிக்க கால அவகாசம் வழங்கவேண்டும். அனைத்து அரசு துறை அதிகாரிகளின் வருகைப்பதிவையும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினர்.