/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
25ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
/
25ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஏப் 23, 2025 07:02 AM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும், 25ம் தேதி நடைபெறுகிறது.
கலெக்டர் அலுவலகம், இரண்டாவது தளம், அறை எண்: 240ல், காலை, 10:30 மணிக்கு துவங்கி கூட்டம் நடைபெறும். கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை, கலெக்டரிடம் வழங்கவேண்டும்.
பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில், ஒரு சங்கத்துக்கு ஒருவர் வீதம், தங்கள் கோரிக்கைகளை நேரடியாக கலெக்டரிடம் தெரிவிக்கலாம். கூட்டத்தின் ஒருபகுதியாக, நுண்ணுயிர் பாசனம் அமைக்க வழிகாட்டும் வேளாண் உதவி மையம் அமைக்கப்படுகிறது.
இம்மையத்தில், நுண்ணுயிர் பாசனம் அமைப்பது குறித்த தகவல்கள் அளிக்கப்படும். உரிய ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு, நுண்ணுயிர் பாசன மேலாண்மை போர்ட்டலில் பதிவு செய்து கொடுக்கப்பட உள்ளது.

