/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வரும் 20ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
/
வரும் 20ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்
ADDED : டிச 16, 2025 08:00 AM
உடுமலை: மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 20ம் தேதி நடக்கிறது.
திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும் 20ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண் 20ல் நடக்கிறது. இதில், விவசாயிகள் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்குமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மேலும், இக்கூட்டத்தில் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க வசதியாக, வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களை கொண்ட வேளாண் உதவி மையம் அமைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்.
உரிய ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு, நுண்ணீர் பாசன அமைப்பில் பதிவு செய்து வழங்கப்படும். வேளாண் சார்ந்த துறைகளைக்கொண்டு, கருத்துக்காட்டி அமைக்கப்படும். இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

