ADDED : பிப் 23, 2024 12:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது. முதலில் தனிநபர் விவசாயிகளும், அதன்பின், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் சங்கத்துக்கு ஒருவர் வீதம், தங்கள் கோரிக்கைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.
கூட்டத்தின் ஒருபகுதியாக, வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை சார்பில், நுண்ணுயிர் பாசனம் அமைக்க வழிகாட்டும் உதவி மையம் அமைக்கப்படுகிறது. இம்மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான தகவல்கள் வழங்கப்படும். உரிய ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு, நுண்ணுயிர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்துகொடுக்கப்பட உள்ளது.