sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'சிபில் ஸ்கோர்' நடைமுறை வேண்டாம்! விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

/

'சிபில் ஸ்கோர்' நடைமுறை வேண்டாம்! விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

'சிபில் ஸ்கோர்' நடைமுறை வேண்டாம்! விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

'சிபில் ஸ்கோர்' நடைமுறை வேண்டாம்! விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 15, 2025 11:09 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; கூட்டுறவு பயிர்க் கடன் வழங்க சிபில் ஸ்கோர் நடைமுறையை ரத்து செய்ய கோரி, விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பயிர்க்கடன் பெற சிபில் ஸ்கோர் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்கத்தின் செயல் தலைவர் வெற்றி தலைமை வகித்தார். மாநில தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார். இதில், பங்கேற்ற நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கநிர்வாகிகள் கூறியதாவது:

விவசாய பயிர்க்கடன்களுக்கு கூட்டுறவு கடன் சங்கங்களில் சிபில் ஸ்கோர் என்ற நடைமுறை தேவையற்றது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். மேலும், இந்த உத்தரவு ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் தாங்கள் பெற்ற பயிர்க்கடன்களை செலுத்தக் கூடாது.

இது குறித்து அனைத்து பகுதியிலும் விவசாயிகளுக்கு தெரிவிக்கும் வகையில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் பகுதி வாரியாக பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us