/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அணை கரையில் சீமை கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
/
அணை கரையில் சீமை கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
அணை கரையில் சீமை கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
அணை கரையில் சீமை கருவேல மரங்கள் அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜன 07, 2025 02:11 AM
உடுமலை,; உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வனப்பகுதியையொட்டி, திருமூர்த்தி அணை அமைந்துள்ளது.
பி.ஏ.பி., நான்கு மண்டல பாசனத்தில், திருப்பூர், கோவை மாவட்டத்துக்குட்பட்ட, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, இந்த அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. திருமூர்த்தி அணையானது, 2,679 மீ., நீளத்துக்கு அமைந்துள்ளது.
கரையில், பூங்கா உட்பட கட்டமைப்புகள் இல்லாத நிலையில், திருமூர்த்திமலை ரோட்டுக்கு, அணை கரைக்கும், இடையிலான பகுதியில், பல்வேறு மரங்கள், இயற்கையாக செழித்து வளர்ந்துள்ளன.
இந்நிலையில், சமீபமாக அணைக்கரையில், சீமை கருவேலன் மரங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிரதான கால்வாயில் இருந்து, சாம்பல்மேடு வரை, பூங்கா அமைக்க, மரங்கள் அகற்றப்பட்ட இடத்தில், இவ்வகை மரங்கள் செழித்து வளர்ந்து வருகின்றன.
அதே போல், காண்டூர் கால்வாய் அணையில் சேரும் இடத்திலிருந்து, நீச்சல் குளம் வரையிலான காலியிடம், சீமைகருவேல மரங்களின் வனமாக மாறியுள்ளது.
இப்பகுதியில், மான் உட்பட தாவர உண்ணிகள், வனத்திலிருந்து வெளியேறி, அணைப்பகுதியில், தண்ணீர் அருந்த செல்லும்.
இதனால், சுற்றுச்சூழலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், சீமைகருவேல மரத்தின் விதைகள், வனப்பகுதிக்குள் பரவ வாய்ப்புள்ளது. இதே போல், அணை நீரில் சேரும், அம்மரத்தின் விதைகள், இரு மாவட்ட பாசன நிலங்களுக்கும், சென்று சேரும்.
விவசாயிகள் கூறுகையில், 'சுற்றுச்சூழலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், சீமை கருவேல மரங்கள், பாசன ஆதாரமான, அணையின் கரையில், அதிகரித்துள்ளது. பொதுப்பணித்துறை சார்பில், அணை கரையில், உள்ள இம்மரங்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.