sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மக்காச்சோளம் விலை விவசாயிகள் கவலை

/

மக்காச்சோளம் விலை விவசாயிகள் கவலை

மக்காச்சோளம் விலை விவசாயிகள் கவலை

மக்காச்சோளம் விலை விவசாயிகள் கவலை


ADDED : பிப் 01, 2025 12:27 AM

Google News

ADDED : பிப் 01, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ; அறுவடை நேரத்தில் விலைவீழ்ச்சி அடைவதால், மக்காச்சோளத்துக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில், ஒரு லட்சம் ஏக்கர் வரை, மக்களாச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த, மூன்று மாதங்களுக்கு முன், மக்காச்சோளத்துக்கு, குவிண்டாலுக்கு, 2,700 முதல், 2,900 ரூபாய் வரை விலை கிடைத்தது.

இதனால், விவசாயிகள் அதிக பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய முன்வந்தனர்.

கடந்த, 10ம் தேதிக்கு பின், படிப்படியாக விலை சரிய துவங்கியது. அறுவடை துவங்க இருக்கும் நேரத்தில், குவிண்டாலுக்கு, 2,250 முதல், 2,350 ரூபாய் என குறைந்துவிட்டது.

இதனால், மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள், ஏக்கருக்கு, 6,000 முதல், 7,000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுமென கவலை தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள், நஷ்டத்தை தடுக்கும் வகையில், சரியான விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென, திருப்பூர் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டரிடம் நேற்று முறையிட்டனர்.

இது குறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மதுசூதனன் கூறுகையில், ''கோழித்தீவனம், கால்நடைகளுக்கான கலப்பு தீவனம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மக்காச்சோளத்தை கொள்முதல் செய்கின்றன.

தற்போது, கோழி மற்றும் கால்நடை களுக்கான கலப்பு தீவனம் விலை குறையவில்லை. மாதாமாதம் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது.

தீவன தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து, மக்காச்சோள விலையை குறைப்பு செய்கின்றன. விவசாயிகளுக்கு, உரிய விலை கிடைக்காதபட்சத்தில், ஏக்கருக்கு, 7,000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். நஷ்டத்தை தடுக்க, நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us