
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்;பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:
ஊராட்சி, 6வது வார்டு அப்பாசியன்காடு பிரதான குழாயில் குடிநீர் வருவதில்லை என, பலமுறை புகார் கூறினோம். இது தொடர்பாக, போராட்டங்களும் நடத்தியுள்ளோம். பி.டி.ஓ., மற்றும் ஊராட்சி நிர்வாகம், உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால், இரண்டு ஆண்டாகியும் பிரச்னை நீடிக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

