/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பையில் தீயை அணைக்க மக்களுக்கு தீயணைப்பான்; பா.ஜ.சார்பில் வழங்கல்
/
குப்பையில் தீயை அணைக்க மக்களுக்கு தீயணைப்பான்; பா.ஜ.சார்பில் வழங்கல்
குப்பையில் தீயை அணைக்க மக்களுக்கு தீயணைப்பான்; பா.ஜ.சார்பில் வழங்கல்
குப்பையில் தீயை அணைக்க மக்களுக்கு தீயணைப்பான்; பா.ஜ.சார்பில் வழங்கல்
ADDED : ஜன 06, 2026 08:48 AM

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் தேங்கப்படும் குப்பையை அப்புறப்படுத்துவதில் தொடர்ந்து பிரச்னை நிலவி வருகிறது.
நகரில் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பையை அப்புறப்படுத்தாமல் தீ வைக்கப்படுவதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. குப்பை பிரச்னை மற்றும் குப்பைக்கு தீ வைக்கப்படுவதை கண்டித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ. ஆண்டிபாளையம் மண்டலம் சார்பில், குப்பைக்கு தீ வைக்கப்படும் பகுதியில், மக்களுக்கு தீயணைப்பான் கருவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
பா.ஜ. வினர் வீடு, வீடாக சென்று, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தீயணைப்பான் கருவி வழங்கினர். மண்டல தலைவர் பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர்கள் சிவசங்கரி, ரம்யா, ஜெயலட்சுமி, மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் பாண்டியன் நகரில் வரும், 9ம் தேதி நடக்க உள்ள பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவும் மக்களுக்கு கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.

