sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ

/

சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ

சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ

சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ


ADDED : நவ 28, 2024 03:07 AM

Google News

ADDED : நவ 28, 2024 03:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:கேரளாவில் இருந்து ஆந்திரா சென்று கொண்டிருந்த சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயிலில் திருப்பூர் அருகே வந்த போது லேசான தீ விபத்து ஏற்பட்டது.

கேரள மாநிலம் கொல்லம் - ஆந்திரா மசூலிப்பட்டினம் செல்லும் சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திரா நோக்கி, கோவை, திருப்பூர் வழியாக சென்று கொண்டிருந்தது. வஞ்சிபாளையம் அருகே ரயில் வந்த போது, மாற்றுத்திறனாளிகள் அமரும் பின்பக்க பெட்டியில் தீப்பற்றியது.

அதிக புகை எழுந்ததை பார்த்த டிக்கெட் பரிசோதகர் தகவலின்படி, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்து தீயணைப்பான்களால் தீ அணைக்கப்பட்டது.

இதுதொடர்பாக முதல் கட்ட விசாரணையில், ரயில் பெட்டியின் சக்கரம் மற்றும் பிரேக் இடையே இருந்த ரப்பர் உராய்ந்து புகையுடன் லேசாக தீப்பற்றியது தெரிந்தது. அரைமணி நேரத்தில் பிரச்னை சரி செய்யப்பட்டு ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us