sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மடத்துக்குளத்தில் தீயணைப்பு நிலையம்

/

மடத்துக்குளத்தில் தீயணைப்பு நிலையம்

மடத்துக்குளத்தில் தீயணைப்பு நிலையம்

மடத்துக்குளத்தில் தீயணைப்பு நிலையம்


ADDED : நவ 17, 2024 10:05 PM

Google News

ADDED : நவ 17, 2024 10:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; தமிழகத்தில், ஏழு இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, துாத்துகுடி மாவட்டம் ஏரல், செங்கல்பட்டு - கோவளம், காஞ்சிபுரம்- படப்பை, சிவகங்கை - புதுவயல் மற்றும் திருநெல்வேலி என, ஏழு இடங்களில் புதிதாக தீயணைப்பு நிலையங்கள் அமைக்க அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தீயணைப்பு நிலையங்களில், ஒரு வாகனம், ஒரு தீயணைப்பு அலுவலர், 2 முன்னணி தீயணைப்பு வீரர்கள், டிரைவர் உட்பட, 17 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கான தளவாட பொருட்களும் வழங்கப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகாவில், தொழிற்சாலைகள் மற்றும் விவசாய நிலங்கள் அதிகளவு உள்ள நிலையில், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

அதன் அடிப்படையில் தற்போது, அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, மடத்துக்குளம் தாலுகாவில், தற்காலிகமாக தீயணைப்பு நிலையம் துவக்குவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் தீயணைப்பு நிலையம் துவக்கப்படும், என, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us