/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவளாபுரி அம்மன் கோவில் குண்டம் விழா கொடியேற்றம்
/
சிவளாபுரி அம்மன் கோவில் குண்டம் விழா கொடியேற்றம்
ADDED : ஏப் 21, 2025 05:49 AM

அவிநாசி : அவிநாசி தாலுகா, நடுவச்சேரியில் உள்ள ஸ்ரீ சிவளாபுரி அம்மன் கோவிலில் குண்டம் விழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடந்தது. சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மஞ்சள் நீர் கிணறு சென்று வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று குண்டம் திறப்பு, அக்னி பூ போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தீர்த்த குடம், பூச்சட்டி, கரகம் எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து வேல் பூஜை நடைபெறுகின்றன. நாளை குதிரை உத்தரவு பெறுதல், படைக்கலம் எடுத்து வருதல், குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
வரும் 23ம் தேதி மறு பூஜை, மஞ்சள் நீர், அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது. குண்டம் விழா நாட்களில் விழாக் குழுவினர், முறைக்கட்டு மிராசுகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.