ADDED : டிச 06, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள், ஜெ., படத்துக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
குமரன் நினைவிடம் அருகே, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெ., படத்துக்கு மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையில், மாநில, மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள், மலர் துாவி மரியாதை செலுத்தினர்.அதே போல் மாநகராட்சி பகுதியில் வார்டு கிளைகளிலும் ஜெ., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.