sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பெண்ணை எரித்து கொன்ற முன்னாள் போலீஸ்காரர் கைது

/

 பெண்ணை எரித்து கொன்ற முன்னாள் போலீஸ்காரர் கைது

 பெண்ணை எரித்து கொன்ற முன்னாள் போலீஸ்காரர் கைது

 பெண்ணை எரித்து கொன்ற முன்னாள் போலீஸ்காரர் கைது


ADDED : டிச 10, 2025 08:04 AM

Google News

ADDED : டிச 10, 2025 08:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெள்ளகோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், வட்டமலைக்கரை அணை பகுதியில் டிச., 6ம் தேதி அழுகிய நிலையில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விசாரணையில், இறந்த பெண்ணின் கை, கால்களும், உடைமைகளும் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், தலையின் ஒரு பகுதியில் கல்லால் தாக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

இறந்த பெண் யார் என்பது குறித்து, இரு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. அதில், கொலையான பெண், பழனியை சேர்ந்த வடிவுக்கரசி, 45, என்பதும், அவரை, ஆண் நண்பரான அதே ஊரை சேர்ந்த சங்கர், 55, என்பவர் கொலை செய்ததும் தெரிந்தது.

சங்கர், 1998ம் ஆண்டு போலீஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். பின், ஏலக்காய் கடை நடத்தியும், செக்யூரிட்டியாகவும் வேலை செய்து வந்தார். வடிவுக்கரசியிடம் பழக்கம் ஏற்பட்ட பின், அவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.

வேலை வாங்கி தராததால், திரும்ப பணத்தை கேட்டபோது, தகராறு ஏற்பட்டது. இதனால், வடிவுக்கரசியை தலையில் தாக்கி, தீ வைத்து எரித்துள்ளார். சங்கரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us