sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஏலச்சீட்டு நடத்தி மோசடி; பாதிக்கப்பட்டோர் 'தர்ணா'

/

ஏலச்சீட்டு நடத்தி மோசடி; பாதிக்கப்பட்டோர் 'தர்ணா'

ஏலச்சீட்டு நடத்தி மோசடி; பாதிக்கப்பட்டோர் 'தர்ணா'

ஏலச்சீட்டு நடத்தி மோசடி; பாதிக்கப்பட்டோர் 'தர்ணா'


ADDED : செப் 16, 2025 11:23 PM

Google News

ADDED : செப் 16, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூரில், ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கமிஷனர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட, 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், பாளையக்காடு பகுதியை சேர்ந்தவர் சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். கே.வி.ஆர்., நகர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த வர்கள் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர்.

இதன் வாயிலாக, 35 லட்சம் ரூபாயை செலுத்தினர். சீட்டுக்கான தவனை முடிந்தும் கூட, ஏலச்சீட்டு பணத்தை திரும்ப செலுத்தாமல் காலம் கடத்தினர். இதுதொடர்பாக, கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேற்று பாதிக்கப்பட்ட மக்கள் மனுவுடன் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, 23 பேரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us