ADDED : ஏப் 10, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூரை சேர்ந்த, 25 வயது பெண் ஒருவரது மொபைல் போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் தொடர்பு கொண்ட நபர் பகுதிநேர வேலைக்கு தினமும், சில எளிய டாஸ்க்குகள் முடிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.
அப்பெண், அவர்கள் கொடுத்த 'லிங்க்' மூலம் குழுவில் இணைந்தார். சம்பாதிக்கலாம் என நம்பி, பல தவணைகளில், 5.79 லட்சம் ரூபாய் செலுத்தினார். ஏமாற்றப்பட்டதை அறிந்து திருப்பூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.