sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாலிபரிடம் ரூ.18.90 லட்சம் ஏமாற்றிய மோசடி கும்பல்

/

வாலிபரிடம் ரூ.18.90 லட்சம் ஏமாற்றிய மோசடி கும்பல்

வாலிபரிடம் ரூ.18.90 லட்சம் ஏமாற்றிய மோசடி கும்பல்

வாலிபரிடம் ரூ.18.90 லட்சம் ஏமாற்றிய மோசடி கும்பல்


ADDED : ஜூலை 01, 2025 11:40 PM

Google News

ADDED : ஜூலை 01, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் ; கிரிப்டோகரன்சியில் கூடுதல் லாபம் என கூறி, வாலிபரிடம், 18.90 லட்சம் ரூபாயை மோசடி கும்பல் ஏமாற்றியது. இது குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பூர், முத்தணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர், 32 வயது வாலிபர். சமீபத்தில் இவரது மொபைல் போன் எண், ஒரு வாட்ஸ் அப் குழுவில் சேர்க்கப்பட்டது. அந்த குழுவில் உள்ளவர்கள், சமூக வலைதள சேனல்களுக்கு பணம் செலுத்தி, அதனை குழுவில் பதிவிடுவதன் வாயிலாக, கூடுதலாக பணம் சம்பாறிக்கலாம் என்று பேசி கொண்டிருந்தனர். இதை நம்பிய வாலிபர், அந்த குழுவில் கொடுத்த சில பணிகளை முடித்து, தொகையை பெற்றார்.

இதனையடுத்து, டெலிகிராம் குழுவில் இணைக்கப்பட்டார். குழுவில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியிருந்தனர். இதனை நம்பிய வாலிபர், பல்வேறு வங்கி கணக்கு, யு.பி.ஐ., ஐடிகளுக்கு, 14 பரிவர்த்தனை வாயிலாக, 18.90 லட்சம் ரூபாய் அனுப்பினார்.

அதற்கான லாபத்தை எடுக்க முயன்ற போது, மேலும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டுமென தெரிவித்தனர். ஏமாற்றப்பட்டதை அறிந்த வாலிபர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.






      Dinamalar
      Follow us