sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புதுப்புனல் பாயும்; பயிர்கள் செழிக்கும் இன்று ஆடிப்பெருக்கு கோலாகலம்

/

புதுப்புனல் பாயும்; பயிர்கள் செழிக்கும் இன்று ஆடிப்பெருக்கு கோலாகலம்

புதுப்புனல் பாயும்; பயிர்கள் செழிக்கும் இன்று ஆடிப்பெருக்கு கோலாகலம்

புதுப்புனல் பாயும்; பயிர்கள் செழிக்கும் இன்று ஆடிப்பெருக்கு கோலாகலம்


ADDED : ஆக 02, 2025 11:21 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளாண் பண்பாட்டின் அடையாளம் ஆடிப்பெருக்கு; கோடையில் வறண்ட காற்று வெம்மையுடன் வீசும்; ஆறு, குளம், குட்டைகள் அனைத்தும் காய்ந்து, வறண்டு போயிருக்கும்; விளை நிலங்கள், மழைத்துளிக்காக வானம் பார்த்து காத்திருக்கும்; ஆடி மாதம் பிறக்கும் போது, புது மழை பெய்து, ஆறு, ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் புது வெள்ளம் பாயும்; இந்த நீர், விளை நிலங்களில் புதிய விளைச்சலுக்கு ஏதுவாக இருக்கும் என்பதால், அந்நீருக்கு நன்றி சொல்லி, வணங்கி, விதைப்பை துவக்குவர் விவசாயிகள்.விவசாயிகளுக்கான அந்த நன்னாள் தான் ஆடிப்பெருக்கு. இந்த நாளில் துவங்கும் செயல் எதுவெனினும் பல்கிப்பெருகும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.

தொழில் நகரமாக திருப்பூர் இருந்தாலும், பசுமையும், குளிர்ச்சியும் நிறைந்த கிராமங்களை எல்லையாக கொண்டிருக்கிறது. மாவட்டத்தில் நெல் சாகுபடியில் கூட, விவசாயிகள் அதிகம் ஈடுபடுகின்றனர். தென்னை, பருத்தி, சோளம், காய்கறி, பயறு வகை சாகுபடியும் நடக்கிறது. தமிழரின் பாரம்பரியத்துடன் பின்னி பிணைந்த ஆடிப்பெருக்கில், ஆடிப்பட்டம் தேடி விதைக்க தயாராகியிருக்கின்றனர் விவசாயிகள்.------

நதியை ரசியுங்கள்... நல்லன அறியுங்கள்

கோவை சதாசிவம், சுற்றுச்சூழல் எழுத்தாளர்:'நடந்தாய் வாழி காவேரி' என்ற பாடலுக்கு பொருள் சேர்க்கும் விழா தான் ஆடிப்பெருக்கு. நதிக்கரை நாகரிகத்தின் முதன்மை பண்டிகையாக, தமிழர்களால் நெடுங்காலம் கொண்டாடப்படுகிறது. இதை புறநானுாறு, சிலப்பதிகார பாடல் வரிகள் தெளிவுபடுத்துகின்றன. ஆடிப்பெருக்குக்கு முந்தைய கோடைக்காலத்தில் ஆறு, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் காய்ந்து, வறண்டு போயிருக்கும். இரு மாத காலம் அவை வறண்டு போக வேண்டும் என்பது, இயற்கையின் நியதி.அந்த நீர் நிலைகளில் வாழ்ந்த மீன், தவளை உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்கள், சேற்றில் முட்டையிட்டு மறைந்து போகும். சேறு காய்ந்து, அந்த முட்டைகள் பாதுகாக்கப்படும். ஆடி மாதம், புது வெள்ளம் வருவதற்கு முன், அந்த முட்டைகள் வெடித்து, புழுக்களாக மாறும். அவற்றுக்கு தேவையான உணவு, அடித்து வரப்படும் புது வெள்ளத்தில் இருந்து கிடைக்கும். அடுத்த, 3 நாளில் தலைப்பிரட்டை, மீன் குஞ்சுகளை அங்கு பார்க்க முடியும். எனவே, ஒரு ஆறு உயிர்ச்சூழலை உருவாக்கிக் கொடுக்கிறது. நன்னீர் ஓடும் ஆற்றில் தான் இவை சாத்தியம் என்ற நிலையில், ஆற்றில் குப்பை, சாயநீர், கழிவு கொட்டி மாசுபடுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். இளம் தலைமுறையினரை, வாழ்வில் ஒரு முறையாவது தலைக்காவிரி துவங்கி, பூம்புகார் வரை நதியோரம் அழைத்து செல்ல வேண்டும்; காவிரியைக் காட்ட வேண்டும்; நீர் வாழ் உயிரினங்களை அறியச் செய்ய வேண்டும்.------

'என் மண்... என் நதி'மணிவண்ணன், எழுத்தாளர்:ஆடிப்பெருக்கு சமயத்தில் நீரை வணங்குவது தமிழர் மரபு; பண்பாடு. மனித நாகரிகமே, ஆற்றங்கரையில் தான் உருவானது. யானைகளின் வலசை நிறைந்த மிருதுவான மண்ணும், மணலும் படிந்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் யானைகள், தன் தும்பிக்கையால், ஊன்றி, உறிஞ்சியதால் உருவானது தான் நொய்யல் நதியின் துவக்கம் என்பார்கள். நதிகளை பாதுகாப்பதும், மாசு இல்லாத நல்ல நீரை, அடுத்த தலைமுறைக்கு கொடுத்து செல்வதும் ஒவ்வொருவரின் கடமை. 'என் மண், என் நதி' என இயற்கையின் மீதான பற்று, மரியாதையை அதிகமாக வளர்த்து, இயற்கை வளங்களை பாதுகாக்க தயாராவதும், அதை அடுத்த தலைமுறைக்கு கொடுப்பதற்குமான உறுதியை, இந்நாளில் ஏற்க வேண்டும்.----------வேலைவாய்ப்பு பெருகும்வேலுசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம்:தற்போதைய சூழலில் மண்ணும், நீரும் மாசுபட்டுள்ள நிலையில், இயற்கை வழி விவசாயம், காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது. பிறக்கும் குழந்தையின் மரபணுவில் கூட பாலிதின் நுண்துகள் கலந்திருப்பதாக ஆய்வுகள் கூறும் நிலையில், நோயின்றி வாழ, இயற்கை வழி வேளாண்மை வாயிலாக உற்பத்தி செய்யப்படும் காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களை உண்ண வேண்டும் என்ற விழிப்புணர்வு, விவசாயிகள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அந்தந்த மண் மற்றும் நீருக்குரிய விதைப்பில் இயற்கை விவசாயிகள் கவனம் செலுத்துகின்றனர். இயற்கை வழி வேளாண்மை வாயிலாக தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.---தலைமுறையை காக்கும் பொறுப்புசுந்தர்ராஜன், செயலாளர், வனம் பவுண்டேஷன்:நமக்கெல்லாம் வாழ்வளிக்கும் அனைத்து நதிகளின் ஆதாரமாக, மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, கிழக்கு நோக்கி பாய்ந்து ஓடும் ஆறுகள் உள்ளன. தென்மேற்கு பருவமழையால் பெருக்கெடுத்து ஓடுவதை ஆடிப்பெருக்காக கொண்டாடுகிறோம். இயற்கையை போற்றுவது, தமிழர் மரபு. கால மாற்றத்தால் இன்றைய தொழில்நுட்ப உலகில், இயற்கையை போற்றி பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்க வேண்டிய பொறுப்பு நமக்குண்டு. இந்த ஆடிப்பட்டத்தில் பூமித்தாயை காக்கும் நோக்கில், ஒவ்வொருவரும் குறைந்தது, 5 மரக்கன்றுகள் நட்டு, அதை 2 ஆண்டுகள் வளர்த்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்க வேண்டும். தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கும் வகையில், உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் துவக்கி செயல்படுத்தி வருகிறோம்.---

பசுமை கொஞ்சும் விளைநிலத்தைக் கண்ணுற்றாலே மனதில் இனிமை பிறக்கும்.

இடம்: அவிநாசி, ராவுத்தாம்பாளையம்

பள்ளிகள் தோறும் விதை திருவிழா தமிழக விவசாயிகள் பாதுகாப்புச்சங்கம், தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம், வனத்துக்குள் திருப்பூர் மற்றும் 'வனம்' இந்தியா பவுண்டேஷன் இணைந்து, கடந்த வாரம் 'கொங்கு மண்டல விதைகள் மற்றும் உணவுத் திருவிழா' நடத்தின. கொங்கு மண்டலத்தின் 1,500க்கும் மேற்பட்ட நெல் ரகம், 110க்கும் மேற்பட்ட சுரைக்காய் உட்பட பாரம்பரிய நாட்டு ரக விதைகள்; நாட்டு ரக காய்கறிகள், அதன் நாற்றுகள் இடம் பெற்றிருந்தன. உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் குதிரைவாலி, வரகு, பனிவரகு, சாமை, தினை, சிவப்பு சோளம் உள்ளிட்ட சிறுதானியங்களும், 300க்கும் மேற்பட்ட நாட்டுக்காய்கறி, கீரை விதைகள், கிழங்கு வகைகள் அணிவகுத்தன. 2,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் இதை கண்டு வியந்தனர்; வேளாண்மையின் வியத்தகு பலன்களை புரிந்துகொண்டனர். பள்ளிகள் தோறும் இத்தகைய விதைத்திருவிழா நடத்த ஆலோசித்து வருகிறோம் என்றனர் அதன் ஏற்பாட்டாளர்கள்.-------



விவசாயத்தில் இளைஞர்கள்டாக்டர் சரவணன், திட்ட ஒருங்கிணைப்பாளர்வேளாண் அறிவியல் நிலையம், பொங்கலுார்:திருப்பூரில், அமராவதி மற்றும் பி.ஏ.பி., பாசனம் சார்ந்து, நெல் விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. நெல் சாகுபடியில் தொழிலாளர் பற்றாக்குறையை தவிர்க்க, நேரடி நெல் விதைப்பு, விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி வரும் நிலையில், 'ட்ரோன்' வாயிலாக விதைப்பு உள்ளிட்ட இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்கிறோம். இந்தாண்டு, அரசின் சார்பில் 'ட்ரோன்' ஒதுக்கீடு கிடைக்கும் எதிர்பார்க்கிறோம். மேலும், அங்கக மற்றும் இயற்கை வேளாண்மை தொடர்பாக படித்த வேலையில்லா இளைஞர்கள், பட்டதாரிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி வழங்கி வருகிறோம். தென்னையில், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் விவசாயிகள் பயிற்சி வழங்குகிறோம்.--- ஊக்குவிக்கும் வேளாண் துறை பாமாமணி, துணை இயக்குனர், மாவட்ட வேளாண்மை துறை:ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் கீழ், பயறு வகை விதை தொகுப்பு, அனைத்து குடும்பத்தினருக்கும் வழங்கப்படுகிறது. அனைத்து வட்டாரங்களிலும், 50 சதவீத மானியத்தில் தக்கைப்பூண்டு விதை வினியோகிக்கப்படுகிறது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், மக்காச்சோளம் சிறப்பு திட்டத்தில் விதை, இயற்கை இடுபொருள், உயிர் உரம், நானோ யூரியா வழங்கப்படுகிறது. தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு சோளம், மக்காசோளம், கம்பு, பயறு விதைகள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. உயிர் உரம், நுண்ணுாட்ட கலவை அனைத்து வட்டாரங்களிலும் போதியளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.--------



நீரை வணங்குவோம்வேலுசாமி, தலைவர்,பி.ஏ.பி., கிளைக்கால்வாய் பாதுகாப்பு சங்கம்: பி.ஏ.பி., பிரதான வாய்க்காலின், 126 கி.மீட்டரில் துவங்கும் கடைமடையாக, காங்கயம், வெள்ளகோவில் பகுதிகள் உள்ளன. திருமூர்த்தி அணை, பிரதான கால்வாயில் திறந்து விடப்படும் நீர், 48 நேரம் பயணித்து, கடைமடையை எட்டுகிறது. அந்த வகையில் பல ஆண்டு இடைவெளிக்கு பின், ஆடி 18க்கு முன்பே கடைமடையில் நீர் வந்து சேர்ந்தது. மகிழ்ச்சி பெருக்குடன் அந்த நீரை, விவசாயிகள் பூஜை செய்து வரவேற்றனர். தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும் அந்நீரை பயன்படுத்த, விவசாயிகள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். இன்றயை சூழலில் சுத்தமான நீரும், காற்றும் மிக அவசியம். நீரை போற்றி வணங்குவோம். பி.ஏ.பி., கால்வாயில் நன்னீர் ஓடும் வகையிலான முன்னெடுப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.--








      Dinamalar
      Follow us