sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

100 சதவீத மானியத்தில் பழச்செடிகள்; தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

/

100 சதவீத மானியத்தில் பழச்செடிகள்; தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

100 சதவீத மானியத்தில் பழச்செடிகள்; தோட்டக்கலைத்துறை அறிவிப்பு

100 சதவீத மானியத்தில் பழச்செடிகள்; தோட்டக்கலைத்துறை அறிவிப்பு


ADDED : ஜூலை 21, 2025 11:51 PM

Google News

ADDED : ஜூலை 21, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் வட்டாரத்தில் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில், ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், தற்போது, 100 சதவீத மானியத்தில் காய்கறி விதைகள் மற்றும் பழச்செடிகள் தொகுப்பு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்துகளை அளிப்பதில் காய்கறி மற்றும் பழங்கள் பெரும் பங்காற்றுகின்றன.நகர மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விரைவில் பயனளிக்கும் பப்பாளி, கொய்யா மற்றும் எலுமிச்சை ஆகிய, 3 வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்பு, 100 சதவீத மானியத்தில் தற்போது, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.திருப்பூர் வட்டாரத்தில், காட்டன் மார்க்கெட் வளாகத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில், ஆதார் அட்டை நகலுடன் சென்று, பழச்செடிகள் தொகுப்பு பெற்று பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு 80723 90606, 70926 08799 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us