ADDED : மே 13, 2025 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்,; திருப்பூரில், முழுநிலவை 'டெலஸ்கோப்' வாயிலாக கண்டு களிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் முழு நிலவை கண்டு ரசித்தனர்.
திருப்பூரில், மாதம் தோறும், வானியல் சார்ந்த நிகழ்வை திருப்பூர் ஸ்பேஸ் எக்ஸ்புளோரர்ஸ் அமைப்பைச் சேர்ந்த ரவிக்குமார், முருகவேல், கீதா மணி, கிருஷ்ணராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர். அவ்வகையில், முழு நிலவு காணும் நிகழ்ச்சி, வஞ்சிபாளையம் ரோடு, ரத்தினபுரி கார்டன் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு நிலா குறித்த பல்வேறு அறிவியல் தகவல்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது.