/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பீஹார் வாலிபரை தாக்கி பணம் பறித்த கும்பல்
/
பீஹார் வாலிபரை தாக்கி பணம் பறித்த கும்பல்
ADDED : அக் 06, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ரோஷன் பாஸ்வா, 28. திருப்பூரில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு சென்ற அவர், அருகே உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைக்கு சென்றார். அவரை பின்தொடர்ந்து வந்த பிக்பாக்கெட் கும்பல், பணம், மொபைல் போனை பறித்து, அவரை கடுமையாக தாக்கியது. காயமடைந்த வாலிபரை பொதுமக்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். திருப்பூர் தெற்கு போலீசார், கும்பலை தேடி வருகின்றனர்.